<?xml version="1.0" encoding="UTF-8"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
  <title>DSpace Community:</title>
  <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/88" />
  <subtitle />
  <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/88</id>
  <updated>2026-08-25T07:33:03Z</updated>
  <dc:date>2026-08-25T07:33:03Z</dc:date>
  <entry>
    <title>இரகுவம்சத்தின் ஆற்றுப்படலம் ஓர் ஆய்வு நோக்கு</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12915" />
    <author>
      <name>Kumaran, E.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12915</id>
    <updated>2026-08-25T06:07:25Z</updated>
    <published>2022-01-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: இரகுவம்சத்தின் ஆற்றுப்படலம் ஓர் ஆய்வு நோக்கு
Authors: Kumaran, E.
Abstract: இரகுவம்மிசம் யாழ்ப்பாண மன்னர் காலப்பகுதியில் ஈழத்தில் தோற்றம் பெற்ற காவியங்களில் ஒன்றாகும். இதனை இயற்றியவர் அரசகேசரி. வடமொழியில் மகாகவி காளிதாசரால் பாடப்பட்ட ரகுவம்ச காவியத்தினைத் தழுவி இக்காவியம் தமிழில் பாடப்பட்டுள்ளது. இரகுவம்மிச காவியத்தின் முதலாவது படலம் ஆற்றுப்படலமாகும். இதில் இருபத்தாறு செய்யுள்கள் உள்ளன. சரயுநதியின் உற்பத்தி, ஊட்டம், வளம், அழகு என்பவற்றை இப்படலம் விரிவாக வர்ணிக்கின்றது. மூலநூலில் இல்லாத படலம் ஒன்றினை அரசகேசரி தனது காவியத்தில் சேர்த்துக் கொண்டதன் காரணம் அல்லது பின்னணி யாது என்பதை வினாவாக முன்வைத்து இந்த ஆய்வு நகர்தப்படுகின்றது. இரகுவம்மிச காவியத் தொடக்கத்தில் ஆற்றுப்படலத்தினை அரசகேசரி அமைத்ததன் நோக்கம், ஆற்றுப் படலத்தினை அவர் கட்டமைத்திருக்கும் நுட்பம். அவரின் கவித்துவம் அதில் வெளிப்படும் வகை, அவரின் தனித்துவத்தினை அடையாளப் படுத்துவதில் ஆற்றுப்படலத்தின் முக்கியத்துவம் என்பவற்றை ஆராய்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும். இந்த ஆய்வு விவரண முறையியலின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது. பகுப்பாய்வு. ஒப்பாய்வு அணுகுமுறைகள் ஆற்றுப்படலத்தினை நுணுகி நோக்குவதற்கும் கம்பராமாயணம் போன்ற காவியங்களுடன் இதனை ஒப்பு நோக்குவதற்கும் பயன்படுத்தப் பட்டுள்ன. இவ்வாய்வின் மூலம் ஆற்றுப்படலம் இரகுவம்மிச காவியத்தில் பெறும் இடம், அதனைக் கட்டமைப்பதில் அரசகேசரி காட்டியிருக்கும் அக்கறை. அதில் அவரின் கலைத்துவம் வெளிப்படும் பாங்கு என்பவற்றினை விளங்கிக் கொள்ள முடியும்.</summary>
    <dc:date>2022-01-01T00:00:00Z</dc:date>
  </entry>
  <entry>
    <title>சிலப்பதிகாரத்தில் அறவாழ்வை எடுத்துரைப்பதில் கவுந்தியடிகளின் பங்களிப்பு</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12914" />
    <author>
      <name>Ajanthakumar, T.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12914</id>
    <updated>2026-08-25T05:13:46Z</updated>
    <published>2023-01-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: சிலப்பதிகாரத்தில் அறவாழ்வை எடுத்துரைப்பதில் கவுந்தியடிகளின் பங்களிப்பு
Authors: Ajanthakumar, T.
Abstract: சிலப்பதிகாரம் பெண்ணை முதன்மைப்படுத்தும் காப்பியங்களில் ஒன்றாகும். கண்ணகி மட்டுமல்லாமல் பல்வேறு சமூக வாழ்நிலை வேறுபாடுகளைக் கொண்ட துணைப்பாத்திரங்கள் காவியத்தின் செல்நெறிக்கு செழுமை சேர்க்கின்றனர். அந்தவகையில் நாடுகாண்காதை முதல் அடைக்கலகாதை வரையான ஆறுகாதைகளில் இடம்பெறும் சமணப்பெண் துறவியான கவுந்தியடிகள் சிலப்பதிகாரக்கதைப்போக்கில் பெறும் வகிபாகத்தையும் அவரின் முக்கியத்து வத்தையும் காவியத்தின் வழி கண்டடைவதே இந்த ஆய்வின் நோக்கமாகும். சமணகாவியம் என்று சொல்லப்படுவதற்கு ஏதுவான சமணக்கருத்துகளை எடுத்துரைப்பதுதான் கவுந்தியடிகளின் பாத்திரவார்ப்பு நோக்கமா? கண்ணகியின் ஆளுமையில் செல்வாக்குச் செலுத்துதல்தான் நோக்கமா? என்ற ஆய்வு வினாக்களுக்கான தேடலாக இந்த ஆய்வு அமைகின்றது. பாசம்கெடுக கவுந்தி என்ற வாக்கின் பின்னும் கண்ணகி மீதான பாசத்தையும் பற்றையும் துறக்காத அவரது இயல்பையும் அறச்சீற்றத்தை கண்ணகிக்கு முப்பதுநாட்கள் உடனிருந்து பழகிய இயல்பால் தொற்றவைத்த பாங்கும் என்று அவரது ஆளுமையையும் மதிப்பிடுவதாக இந்த ஆய்வு அமைகின்றது. ஆய்விற்கு விவரணமுறையியலே பெரிதும் பயன்பட்டுள்ளது.</summary>
    <dc:date>2023-01-01T00:00:00Z</dc:date>
  </entry>
  <entry>
    <title>வள்ளுவரும் சமூக மேம்பாடும்</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12913" />
    <author>
      <name>Selvarangitham, S.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12913</id>
    <updated>2026-08-25T04:37:19Z</updated>
    <published>2023-01-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: வள்ளுவரும் சமூக மேம்பாடும்
Authors: Selvarangitham, S.
Abstract: வையத்துள் வாழ்வாங்கு வாழும் நெறிகளை வகுத்துக்காட்டும் திருக்குறள், இலக்கியம் என்னும் நிலையில் மட்டும் நின்றுவிடாமல். மனித வாழ்வியல் கூறுகளைத் திருத்தும் கருவியாகவும் உள்ளது. இதனாலேயே குடும்பம், சமுதாயம், அரசியல், பொருளாதாரம் எனப் பல்வேறுபட்ட வாழ்வியல்சார் நல்லறங்களைப் போதித்து, பேண்தகு சமூகத்தை உருவாக்க முனைந்துள்ளது. இங்கு உலகத்தாருக்குப் பொதுவான இறைதத்துவக் கோட்பாடுகள் பேசப்பட்டுள்ளன. சமூகத்தை மாற்றும் கல்வியின் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. நீதியான பொருளாதார முறைமையும் பேசப்பட்டுள்ளது. அறமற்ற வழியில் பொருள் சேர்த்தல் தவறு என்று மக்களுக்கு உணர்த்தி, சரியான முறையில் பொருளீட்டும் முறைமையும் வலியுறுத்தப்பட்டுள்ளது. வள்ளுவம் பேசிய அரசியல்நெறிகள், அக்காலத் தேவை கருதிச் சொல்லப்பட்டாலும் எக்காலத்துக்கும் பொருந்துவனவாய், எந்நாட்டு அரசியல் அணுகுமுறைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்குகின்றன. உலகில் சமூக மேம்பாட்டு வளர்ச்சிநிலைகளின் அவசியம் கருதிய வள்ளுவர், அவைசார்ந்த கருத்துக்களை முன்வைப்பது பேண்தகு சமூக அபிவிருத்தி நோக்கிய பார்வையிலேயே ஆகும். எனவே சமுதாயம் மேம்பாடு அடைவதற்கான வழிமுறைகளை வள்ளுவத்தின்வழி அடையாளப்படுத்தும் அடிப்படை விவாதத்தையே இவ்வாய்வு முன்வைக்கிறது. இவ்வாய்வில் வள்ளுவரின் திருக்குறள் பிரதி முதன்மைத்தரவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் பண்புசார் மற்றும் விபரணப் பகுப்பாய்வு முறைகள் பிரயோகிக்கப்பட்டு, சமூகவியல் மற்றும் அறவியல் கோட்பாட்டு அணுகுமுறைகளோடு விமர்சன நோக்குநிலையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது</summary>
    <dc:date>2023-01-01T00:00:00Z</dc:date>
  </entry>
  <entry>
    <title>அறநெறிக்காலப் பண்பாட்டசைவியக்கத்தில் பொதுமகளிர்</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12912" />
    <author>
      <name>Selvampikai, N.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12912</id>
    <updated>2026-08-25T05:16:51Z</updated>
    <published>2023-01-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: அறநெறிக்காலப் பண்பாட்டசைவியக்கத்தில் பொதுமகளிர்
Authors: Selvampikai, N.
Abstract: தமிழ்ச்சமூகத்தில் பரத்தமை பற்றிய கருத்துகளை இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. சங்க அக இலக்கியங்களில் பரத்தை என்னும் பெண் பாத்திரம் முதன்மை பெறுவதோடு சமூகத்தில் பரத்தமையும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகக் காணப்பட்டது. அறநெறிக் காலத்தைப் பொறுத்தவரை பரத்தமை கடிந்துரைக்கப்பட்ட தன்மையை அற இலக்கியங்களின் வழி அறியமுடிகின்றது. அறநெறிக் காலத்தில் தோன்றிய இரட்டைக்காப்பியங்கள் பரத்தையரைக் கணிகையர் எனப் பெயர் சுட்டியதோடு ஒரு சமுதாய நிறுவனமாகச் செயற்பட்ட பாங்கினையும் கணிகையர் குலமரபின் மாற்றத்திற்கான புதிய முயற்சிகளையும் எடுத்துக்காட்டியுள்ளன. அறநெறிக்காலச் சமூகக் கட்டுமானத்தில் பொதுமகளிர்க்கு எவ்வாறான இடம் வழங்கப்பட்டுள்ளது? அந்த இடத்தை அற இலக்கியங்கள் உரியவகையில் புலப்படுத்தி நிற்கின்றனவா? என்பது ஆய்வின் பிரச்சினையாகக் கொள்ளப்பட்டு "அறநெறிக்காலப் பண்பாட்டசைவி யக்கத்தில் பொதுமகளிர்" என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது. பண்டைத்தமிழ்ச் சமூகத்தில் பரத்தமை ஓர் ஒழுக்கமாகப் பயிலப்பட்ட நிலையில் அறநெறிக்காலச் சமூகத்தில் அவ் எண்ணக்கருவின் பயில்வு எவ்வாறிருந்தது என்பதே இந்த ஆய்வின் நோக்கமாகும். பரத்தமை குறித்த எண்ணக்கருவின் பயில்வினை அறிவதற்கு அறநெறிக்கால இலக்கியங்கள் எல்லைப்படுத்தப்படுகின்றன. அறநெறிக் காலத்தில் பரத்தமை சமூக நிறுவனமாகச் செயற்பட்டதோடு தளர்ச்சி நிலையும் கண்டது என்ற கருதுகோளின் அடிப்படையில் ஆய்வு முன்னெடுக்கப்படுகின்றது. அற இலக்கியங்களும் இரட்டைக் காப்பியங்களும் முதன்மை ஆதாரங்களாகவும் பரத்தமை தொடர்பாக எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் நூல்களும் துணை ஆதாரங்களாகவும் ஆய்வில் கொள்ளப்படுகின்றன. அற இலக்கியங்களில் பரத்தமை பற்றிய பயில்வினை அறிவதற்கு விவரண ஆய்வு முறையியலும் பரத்தமை தொடர்பான கருத்து மாற்றங்களை அறிவதற்கு ஒப்பீட்டு ஆய்வு முறையியலும் பின்பற்றப்படுகின்றது. அறநெறிக் காலப் பண்பாட்டு அசைவியக்கத்தில் பரத்தமை ஏற்படுத்திய தாக்கத்தை அதன் பயில்வு நிலையை இந்த ஆய்வின் மூலம் கண்டுகொள்ளமுடியும்.</summary>
    <dc:date>2023-01-01T00:00:00Z</dc:date>
  </entry>
</feed>

