Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10667
Title: சைவசித்தாந்தக் கருத்தியல்களின் வெளிப்பாட்டில் திருமந்திரத்தின் மொழிநடைத்திறன்
Authors: Ramesh, S.
Keywords: சைவசித்தாந்தம்;மொழிநடை;எளிமையாக்கம்;விபரண ஆய்வு;திருமந்திரம்
Issue Date: 2017
Publisher: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
Abstract: சைவத் தமிழர்களாகிய நமக்கு ஆதாரநூலாக சிவபரத்துவத்தைப் போற்றும் திருநூலாக திருமந்திரம் காணப்படுகிறது. இத்திருமந்திரம் என்னும் நூலிலுள்ள சைவசித்தாந்தக் கருத்தியல்களை அத்திருப்பாடல் மொழிநடைகளினூடாக எடுத்துக் காட்டுவதே இவ் ஆய்வின் முக்கிய நோக்கமாகும். இறைவனுடைய இயல்புகளை பதி, பசு, பாசம் என்ற கருத்தியல்புகளின் பின்னணியில், திருமூலர் தான் கையாண்ட மொழிநடைக் கூறுகளின் அடிப்படையில் எவ்வாறு புலப்படுத்துகிறார் என்பதை வெளிக் கொணர்வதே இவ்வாய்வுக்குரிய முக்கிய அம்சமாகும். இம் மொழிக்கூறுகளினூடாக சைவசித்தாந்தக் கருத்துக்கள் இழையோடிக் காணப்படுவதை இக்கட்டுரையானது முன்னெடுத்துக் காட்டுகிறது. மேலும் இச்சிந்தனைகள் பற்றிய ஆய்வானது விபரண ஆய்வு முறையினூடாகாகவும், விளக்கமுறை ஆய்வினூடாகவும் எடுத்துக் காட்டப்படுகிறது. இதற்குத் தேவையான உத்தி முறைகளாக சொற்பாகுபாடுகள், நயமிக்க செயற்றொடர்கள், வாக்கியப் பயன்பாட்டு முறைமைகள், கருத்துப் புலப்பாட்டு முறைகள், உணர்ச்சி நடைக்கூறுகள்,உரையாடல்பண்புகள், எளிமையாக்கம் எனப் பலவகைகளில் ஆய்வு முடிவுகள் இங்கு தரப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் பல இலக்கிய மீளாய்வுகள் இவ்வாய்வுக்குரிய முடிவுகளை வெளிப்படுத்துவதில் தேவையான தகவல்களைத் தந்துதவியுள்ளன. எனவே திருமந்திரப் பாடல்களில்காணப்படும் சைவசித்தாந்தக்கருத்தியல்களைமொழிநடைக்கூறுகளினுாடாக வெளிப்படுத்தியுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10667
ISSN: 2478-0634
Appears in Collections:Linguistics and English



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.